இன்றைய இறைமொழி
வெள்ளி, 16 மே ’25
பாஸ்கா நான்காம் வாரம் – வெள்ளி
திருத்தூதர் பணிகள் 13:26-33. யோவான் 14:1-6
இயேசுவின் பிரியாவிடை பேருரையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது இன்றைய நற்செய்தி வாசகம். ‘உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்!’ என்று தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
இயேசுவின் சொற்களும், செயல்களும், அவருடைய இறுதி நாள்கள் பற்றிய செய்திகளும் சீடர்களுக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் தருகின்றன. நம்பிக்கை என்பது வாழ்வின் பிரச்சினைகளிலிருந்து தப்பி ஓடுவது அல்ல, மாறாக, அவற்றின் நடுவே கடவுளின் விரல்களைப் பற்றிக்கொள்வது என்பது இயேசு தரும் பாடம்.
முதல் வாசகத்தில், தொழுகைக்கூடத்தில் உரையாற்றுகிற பவுல், ‘இதுவே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி’ என்று தன் உரையை நிறைவு செய்கிறார். பவுல் அறிவித்த செய்தி நம்பிக்கையாளர்களுடைய பற்றுறுதிக்கு வலு சேர்க்கிறது.
நம் வாழ்வின் உறுதியற்ற நிலைகள் தருகிற அச்சம், குழப்பம் ஆகியவற்றை நாம் நம்பிக்கையால் வெற்றிகொள்ள முடியும்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: